search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருமபுரி விபத்து"

    • ஜோதி வண்டியை ஓட்ட அவரது மகன்கள் சரண், தீரன் ஆகிய 2 பேரை பின்னால் அமர வைத்து வந்து கொண்டிருந்தார்.
    • விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரையும் தேடிவருகின்றனர்.

    காரிமங்கலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (வயது 34). இவர்களுக்கு சரண் (14), தீரன் (9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் ஜோதி பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் தனது கணவர், மகன்களுடன் அங்கேயே வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் திருப்பூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அப்போது ஜோதி வண்டியை ஓட்ட அவரது மகன்கள் சரண், தீரன் ஆகிய 2 பேரை பின்னால் அமர வைத்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மாட்லாம்பட்டி மேம்பாலத்தில் வந்தபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜோதி, இளைய மகன் தீரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க இறத்தனர்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து படுகாயம் அடைந்த சரணை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த தாய்-மகன் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதியமான்கோட்டை-ஓசூர் வரை தற்போது 4 வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரி அதிக வேகத்தில் வந்துள்ளது. மேலும் சாலையில் போடப்படும் சென்டர் வெள்ளை கோடு இன்னும் போடப்படாத காரணத்தால் டிரைவர் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் மோதி இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரையும் தேடிவருகின்றனர்.

    விபத்தில் தொழிலாளியின் மனைவியும், மகனும் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியும் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • கோர விபத்தில் காயம் அடைந்த 5 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாயில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் இரண்டு ஈச்சர் வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் 3 வாகனங்களும் சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியும் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காயம் அடைந்த 5 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மேலும் சாலை பராமரிப்பு குழு மற்றும் தொப்பூர் காவல்துறையின் துரித நடவடிக்கையால் உடனடியாக வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

    • அரூர் பேருந்து நிலையம் அருகில் வந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • சம்பவ இடத்திலேயே எட்வட், அம்பேத்கர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இறைவன். இவரது மகன் சூர்யா என்கிற எட்வட் (வயது23). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 9 மாத குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் எட்வட் அரூர்-மோபிரிப்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல் ஓட்டல் வேலைக்கு சென்றார். பின்னர் இரவு எட்வட் வேலையை முடித்து விட்டு தனது நண்பர் தளித்சேட்டு மகன் அம்பேத்கர் செல்வன் (18) என்பவருடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அரூர் பேருந்து நிலையம் அருகில் வந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே எட்வட், அம்பேத்கர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மீது மோதியது.
    • சாலையில் விழுந்து ராஜா, ஸ்ரீஜா ஆகியோர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள ஓட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ஸ்ரீஜா (வயது9). இவர்கள் இருவரும் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் நாகனம்பட்டி ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்து ராஜா, ஸ்ரீஜா ஆகியோர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வரும் வழியிலேயே ராஜா, ஸ்ரீஜா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அவரது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள காலப்பனஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (வயது40). இவர் இன்றுகாலை அப்பகுதி பள்ளி அருகில் நடந்து சென்றார். அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார். இவரும் அந்த பள்ளி அருகில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மதியம் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×